யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.